மும்பை – அந்தேரி பகுதியை சேர்ந்த தீரா காமத் என்ற ஐந்து வயது குழந்தைக்கு மரபணு ரீதியிலான நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தது. இதனையடுத்து அந்தக் குழந்தைக்கு சிகிச்சையளிக்க, அமெரிக்காவிலிருந்து 16 கோடி மதிப்புள்ள மருந்தை வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கான பணத்தை அக்குழந்தையின் பெற்றோர் க்ரவுட் ஃபண்டிங் (crowd funding) மூலமாக திரட்டினார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2021/02/images-3.jpg)
மேலும் குழந்தையின் உடல்நிலை குறித்து பெற்றோர், பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தனர். இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துக்கு 6 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், குழந்தையின் பெற்றோர் மேற்கொண்டு பணம் செலவழிக்க முடியாமல் இருப்பதால், ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டுமென்று பிரதமர் மோடிக்கு எழுதினார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, உயிர்காக்கும் மருந்துக்கு வரி தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். அதனையடுத்து பட்னாவிஸ் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.