மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அங்கு தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த யஸ்வசந்த் சின்ஹா தற்போது திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து வெளியேறி தனி கட்சி ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். அண்மை காலமாக மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து வந்தனர். இந்நிலையில் தற்போது யஸ்வசந்த் சின்ஹா பாஜகவில் இருந்து திரிணாமூல் காங்கிரஸில் இணைந்திருப்பது அனைவரு கவனத்தியும் பெற்றுள்ளது.
திரிணாமூல் காங்கிரஸில் இணைந்த பிறகு பேசிய அவர் “நாடு இப்போது அசாதாரண சூழலில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தின் வலிமை, ஜனநாயக அமைப்புகளின் பலத்தில் உள்ளது. இப்போது நீதித்துறை உட்பட இந்த ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் பலவீனமாகிவிட்டன எனக் கூறியுள்ளார்.