புதுடெல்லி:-
ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் முதல் உள்நாட்டு கொரோனா தடுப்பூசி கோவாக்சின் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கோவாக்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மனித பரிசோதனையை இந்தியா ஜூலை மாதம் நடத்த உள்ளது.
இந்த கோவாக்சின் இந்தியாவின் தேசிய வைராலஜி நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்று பாரத் பயோடெக் தலைவர் டாக்டர் கிருஷ்ணா எலா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் பாரத் பயோடெக்கின் தடுப்பூசிக்கு மருத்துவ மனித சோதனைகளின் கட்டம் 1 மற்றும் 2 ஐ நடத்த அனுமதித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் புதிய வகையான வைரஸ் என்பதால், இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது கடும் சவாலான பணியாக உள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதுவரை உலக அளவில் 17 தடுப்பு மருந்துகள் மனிதர்களிடையே பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) தலைவர் டாக்டர் பலராம் பார்கவா நாட்டின் அனைத்து முக்கிய மருத்துவக் கல்லூரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்,
கொரோனா வைரஸ் எதிரான தடுப்பு மருந்து முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது புனேயில் உள்ள இந்திய வைராலஜி நிறுவனம் வெற்றிகரமாக உருமாறும் SATS-CoV 2 வைரஸை வெற்றிகரமாக பிரித்தெடுத்தது. இதன் மூலம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோடெக் நிறுவனம் இணைந்து இந்த தடுப்பு மருந்தை தயாரித்தனர்.
இந்த கொரோனா தடுப்பு மருந்தை (BBV152 COVID Vaccine) ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி COVID-க்கு எதிராக செயல்படும்.
மருத்துவ பரிசோதனைகள் நாடு முழுவதும் 12 நிறுவனங்களில் நடைபெற உள்ளது. ஐ.சி.எம்.ஆர் இந்த நிறுவனங்களை தடுப்பூசியின் விரைவான மருத்துவ பரிசோதனைகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது, ஏனெனில் இது அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் கண்காணிக்கப்படும் முன்னுரிமை திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஜூலை முதல் வாரத்திற்குள் (ஜூலை 7ம் தேதிக்குள்) சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளபட்டுள்ளது.
உலகில் செயல்பட்டு வரும் 148 தடுப்பூசி சோதனைகளில் 5 இந்திய நிறுவனங்களிடமிருந்தோ அல்லது இந்திய நிறுவனங்களின் பங்களிப்பில் முயற்சியிலோ நடந்து வருகிறது. இதில் குஜராத்தின் ஜைடஸ் காடிலா நிறுவனமும் உள்ளது. இதே நிறுவனம் 2010 இல் நாட்டில் பன்றிக்காய்ச்சலுக்கான முதல் தடுப்பூசியை தயாரித்தது.
கூடுதலாக, பாரத் பயோடெக் மற்ற நோய்த்தடுப்பு மருந்துகள், இந்தியன் இம்யூனோலாஜிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் சேர்ந்து தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
மருத்துவ பரிசோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகள்:-
1) King George Hospital Vishakhapatnam
2) University of Health Science, Rohtak
3) AIIMS Ansari, Nagpur
4) AIIMS Phulwarisarif, Patna
5) Jeevan Rekha Hospital, Dr BR Ambedkar Road, Opp. Civil Hospital, Belagavi, Karnataka
6) Gillukar Multispeciality Hospital, Nagpur
7) Rana Hospital, Rail Vihar Medical College Road, Gorakhpur
8) SRM Medical College Hospital and Research Centre, Kattankulathur, Tamilnadu
9) Nizam Institute of Medical Science. Pungutta, Hyderabad
10) Dr E Venkata Rao, B 704, Palm Heights Shampur, Orissa
11) Prakhar Hospital, Kanpur, Uttar Pradesh
12) Dr Sagar Vivek Redkar, Consultant Physician, Mumbai.
இந்த நிலையில், ஜைடஸ் கடிலா நிறுவனமும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பு மருந்துக்கும் மனிதர்களிடையே முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை தொடங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது.