மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அங்குள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று தொடங்கியது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவி வருகிறது. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 215 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக கூட்டணி 76 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி 1200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதில் தீடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்த் அதிகாரி 1, 957 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மம்தா பானர்ஜி தனது தோல்வியை ஒத்துக் கொள்ளவதாக கூறியுள்ளார்.