போபால்:-
மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் (Hoshangabad)-ல் பசு பாதுகாவலர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று கொடிய ஆயுதங்களால் தாக்கி, துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/06/IMG-20200629-WA0032-1024x538.jpg)
மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) அமைப்பின் பசு பாதுகாப்பு பிரிவின் (Gau Raksha) மாவட்ட தலைவராக இருப்பவர் ரவி விஸ்வகர்மா (35). இவர் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிபாரியா நகருக்கு (Pipariya) தனது நண்பர்கள் இருவருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த ஒரு கும்பல் கூர்மையான ஆயுதங்களால் அவர்களின் காரை சூழ்ந்து கொண்டு தாக்கியது.
காரினுள் இருந்த ரபி விஸ்வகர்மாவை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது நெஞ்சில் குண்டு பாய்ந்தது. அவரை வெளியே இழுத்துப்போட்டு உயிர் பிரியும் வரை தங்களிடமிருந்த ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர். ரவி விஸ்வகர்மா உடன் காரில் வந்தவர்கள் நண்பர்கள் இருவரையும் சரமாரியாக அந்த கும்பல் தாக்கியது. இந்த காட்சிகளை அவ்வழியே சென்ற ஒருவர் தனது செல்போன் மூலம் படம் பிடித்து உள்ளார். இந்த காட்சிகள் தற்பொழுது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், இது தொடர்பாக 10 பேரை கைது செய்துள்ளனர். முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.