இந்தியா

ம.பி.ல் ஒரே இரவில் லக்ஷதிபாதியான தொழிலாளி..!… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பன்னா:-

மத்தியப்பிரதேசத்தில் சுரங்கத் தொழிலாளி ஒருவர் 3 வைரக்கற்களை கண்டு எடுத்ததன் மூலம் ஓரே இரவில் லக்ஷதிபாதியாக உயர்ந்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள ஆழமற்ற சுரங்கம் ஒன்றில் சுபால் என்ற தொழிலாளி ஒருவர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது 7.5 காரட் மதிப்பிலான 3 வைரக்கற்களை அந்த தொழிலாளி கண்டு எடுத்தார்.

ALSO READ  பத்தாம் வகுப்பு பாஸ் செய்த கூலித்தொழிலாளியின் மகளுக்கு வீடு வழங்கிய மாநகராட்சி… 

இதனை அடுத்து அந்த வைரக்கற்களை சுரங்க அதிகாரியிடம் சுபால் ஒப்படைத்தார். 

இதுதொடர்பாக மாவட்ட வைர அதிகாரி K.பாண்டே கூறுகையில்:-

இந்த வைரக்கற்கள் ஒவ்வொன்றும் 30 முதல் 35 லட்சம் ரூபாய் மதிப்புடையவை என்றும் அவை அரசு விதிப்படி ஏலம் விடப்பட்டு பின்னர் 12சதவீதம் வரிப்பிடித்தம் போக மீதி 88சதவீத தொகை அந்த தொழிலாளியிடம் ஒப்படைக்கப்படும் என்று  தெரிவித்தார்.

ALSO READ  போதைப்பொருள் பயன்படுத்தியதை மறைக்க நடிகை ராகினி திவேதி செய்த செயல்…..

இதேபோன்று சில தினங்களுக்கு முன்னர் புண்டேல்கண்ட் பிராந்தியத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் இருந்து தொழிலாளி ஒருவர் 10.69 காரட் மதிப்பிலான வைரம் ஒன்றை கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேச மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியான பன்னா உலக அளவில் வைர சுரங்கத்தில் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்;  வட இந்தியாவில் வீடுகள் அதிர்வு !

News Editor

வழிதவறி வந்த சிறுமிகள் பரிசுகளுடன் பத்திரமாக வழியனுப்பி வைப்பு :

naveen santhakumar

பசவராஜ் பொம்மை கர்நாடக முதலமைச்சராக பதவி ஏற்பு

News Editor