மும்பை:
இந்தியாவில் கொரானா தொற்று இன்னும் குறையாத மாநிலங்களில் முதன்மையானது மஹாராஷ்டிரா மாநிலம் ஆகும். 2 வது மாநிலம் நமது அண்டை கேரளாவாகும்.
மும்பை நகரில் கொரானா தொற்று அதிகமானத்தைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் மின்சார ரயில்களில் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. சுகாதார பணியாளர்கள், அரசு ஊழியர்கள் மட்டுமே மின்சார ரயில்களில் பயணம் செய்ய மஹாராஷ்டிரா மாநிலம அரசு அனுமதி அளித்தது.
மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக பொதுமக்கள் அலுவலகம், வேலைக்கு செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
2 டோஸ் கொரானா தடுப்பூசி போட்டவர்களை மட்டும் மின்சார ரயில்களில் அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
இன்று மஹாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சமூகவலைதளம் மூலமாக பொதுமக்களிடம் உரையாற்றினார். முதல் கட்டமாக 2 டோஸ் கொரானா தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என்றும் 2வது கொரானா டோஸ் தடுப்பூசி போட்டு 14 நாட்கள் நிறைவடைந்ததவர்கள் வருகிற சுதந்திர தினம் முதல் மின்சார ரயில்களில் பயணம் செய்யலாம் என முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.