தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி. செல்வத்தை ஆதரவாக நடிகை கௌதமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், அம்மாவின் ஆட்சி அமைந்திட தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றும் வருடத்திற்கு இலவசமாக 6 சிலிண்டர், வாஷிங் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்குவதாகவும் கூறி வீதி வீதியாக ஆட்டோவில் சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு கூறினார்.
தங்க சாலையில் தொடங்கி மின்ட் தெரு, இருசப்பன் தெரு, உள்ளிட்ட பகுதிகளில் மேளதாளம் முழங்க தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். வழிநெடுகிலும் வேட்பாளருக்கு அவருக்கு மலர் தூவியும் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். அதிமுக சார்பில் ஜே.சி.டி. பிரபாகரன், மறைந்த நடிகர் சிவாஜியின் பேரன் உள்ளிட்ட தோழமை கட்சியினர்கள் பரப்புரையில் ஈடுப்பட்டனர்