தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையடுத்து அரசியல் காட்சிகள் தேர்தல் அறிக்கை, பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு என தீவிரமாக இயங்கி வருகிறது. அந்தவகையில் அதிமுக சார்பில் சைதை துரைசாமி சென்னை ஜோதியம்மாள் நகரில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
அதனையடுத்து சைதை துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சமீபத்திய கருத்து கணிப்புகள் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளதை குறித்து கேள்வி எழுப்பியதற்கு கருத்து கணிப்பு முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுதவில்லை என்றார். மேலும் மக்களுக்கான அரசாக இருந்து வரும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்றும் தெரிவித்தார்.
மேலும் பொதுப்பணித்துறை அப்புறப்படுத்த முனைந்த ஜோதியம்மாள் நகரை அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அனுமதியோடு உருவாக்கியதை குறிப்பிட்ட அவர், அதற்கு நன்றி தெரிவித்து மக்கள் அக்காலத்தில் வெளியிட்ட பிரசுரத்தைக் காண்பித்து மகிழ்ந்தார்.