தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. அந்தவகையில் தேமுதிகவும் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல், நாளை முதல் தொடங்கவுள்ளது
கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் தமிழ்நாடு மட்டும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளில் தேமுதிக சார்பாக போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. நேற்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விருப்ப மனுத் தாக்கல் செய்தார். மேலும் விஜய்காந்த் மகன் விஜய பிரபாகரனும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
விருப்ப மனு தாக்கல் செய்யம் கடைசி நாள் இன்றுடன் நிறைவடையும் நிலையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு காலை மாலை என இருபகுதிகளாக நேர்காணல் நடைபெறவுள்ளதாக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.