தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி கோவை தெற்கு தொகுதியை தவிர போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்துள்ளது. அதனையடுத்து கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன், பத்மப்ரியா உள்ளிட்ட பலரும் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் முருகானந்தம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,கமல்ஹாசனின் சர்வாதிகார போக்கினால் தேர்தலில் தோல்வி அடைந்தோம். கூட்டணிக் கட்சிகளுக்கு 100 தொகுதிகளை ஒதுக்கியதே தோல்விக்கு காரணம். அதுமட்டுமல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட நமது கட்சியில் ஆள் இல்லை என கமல் கூறியது உறுத்தலாக உள்ளது எனக் கூறியுள்ளார்.