அரசியல்

மே 2 ஆம் தேதி தான் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட வேண்டும்; அமைச்சர் ஜெயக்குமார்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ஆம் தேதியன்று தான் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக கோரிக்கை.

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் சட்டத்துறை இணைச் செயலாளர் பாபு முருகவேல் ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், பல்வேறு மாவட்டங்களில் இருந்து மே 1ம் தேதி அதாவது வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முதல் நாளே தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற உள்ளதாக  அதிமுகவுக்கு தகவல் வந்தது, அதனையடுத்து தேர்தல் நடைமுறையின்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று தான் தபால் வாக்குகளை எண்ண வேண்டும் மாறாக அதற்கு முதல் நாள் எண்ண கூடாது என தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார் .

ALSO READ  ஆளுநர் அதிகாரத்திற்கு ஆப்பு வைக்கும் திமுக… அதிரடி ஆக்‌ஷனில் ஸ்டாலின்!

மேலும் வாக்கு எண்ணிக்கை நடைமுறை கடந்த காலங்களில் எப்படி இருந்ததோ அதே போன்ற நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் எனவும் அது ஏற்கனவே நடந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எம்பி விஜய் வசந்த் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்…!

News Editor

சபாநாயகரின் கண் அசைவிற்கு கட்டுப்படுவோம்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு 

News Editor

திமுகவினர் கொண்டாட்டம்; காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் !

News Editor