தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. அந்தவகையில் திமுக கூட்டணியில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் அங்கம் வகித்து போட்டியிடும். வரும் 8 ஆம் தேதி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்புவிடுத்துள்ளதாக கூறினார். எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதைப் பற்றி பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்படும் என்றார்.