டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் 50 மீட்டர் பிஸ்டல் SH1 பிரிவில், இந்திய வீரர்கள் மணீஷ் நர்வால், சிங்கராஜ் ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி வென்று, சாதனை படைத்துள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் நடைபெற்று வருகின்றது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியாவை சேர்ந்த 54 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியா விளையாட்டு வீரர்கள் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி இவர்கள் இருவருக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
மேலும், பாராலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற மணீஷ் நர்வாலுக்கு ரூ 6 கோடி பரிசும், சிங்க்ராஜ் அதானாவுக்கு ரூ 4 கோடி பரிசும் வழங்கப்படும் என அரியானா அரசு அறிவித்துள்ளது. மேலும் பதக்கம் வென்றவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.