தமிழகம்

15 வயது சிறுமிக்கு love letter கொடுத்த 66 வயது முதியவர்… போக்ஸோவில் கைது… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோவை:-

கோவை போத்தனூர் பகுதியில் 15 வயது சிறுமிக்கு 66 வயது முதியவர் ஒருவர் காதல் கடிதம் கொடுத்தால் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவை போத்தனூர் அருகே பஜனை கோயில் வீதியை சேர்ந்தவர் முகமது பீர் பாஷா (66). அதே பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமியிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு காதல் கடிதம் கொடுத்துள்ளார். இதனை அச்சிறுமி, தனது தாயாரிடம் கொடுத்த நிலையில், அவர்கள் முதியவரின் வீட்டில் தெரிவித்து அந்த முதியவரை கண்டித்துள்ளனர். 

ALSO READ  சிவசங்கர் பாபா மிகவும் நல்லவர்; பெண்கள் மீது நாட்டமற்றவர்; இது திட்டமிட்ட சதி: பிரபல நடிகர்..!

இதனையடுத்து முகமது பீர் பாட்ஷா குடும்பத்தாரும், அவரை கண்டித்துள்ளனர். அந்த முதியவரை சிறிது நாட்கள் உறவினர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் போத்தனூருக்கு வந்த அந்த முதியவர்,  அந்த சிறுமியை மீண்டும் மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த அச்சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. 

ALSO READ  மைசூர் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: தமிழகத்தை சேர்ந்த ஐவர் கைது…!

புகாரை விசாரித்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முகமது பீர் பாட்ஷாவை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

அறுபதிலும் ஆசை வரும் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த சம்பவம் நடந்திருப்பது வேதனையாய் அமைந்துள்ளது. இது போன்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொங்கல் பரிசு ரூ 2500…! அரசனை வெளியிட்டது தமிழக அரசு…!

News Editor

மதுரையில் பைக்குகளை திருடிய பாதிரியார் கைது…

naveen santhakumar

தமிழகத்தை மிரட்டும் கருப்பு பூஞ்சை; 5 ஆயிரம் மருந்து குப்பிகள் வாங்க உத்தரவு!

News Editor