தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கடலூர்:-
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் அனல் மின் நிலையத்தில் (NLC) பாய்லர் வெடித்து விபத்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/05/IMG-20200507-WA0122.jpg)
இந்த விபத்தானது இரண்டாவது அனல் மின் நிலையத்தில் உள்ள பாய்லரில் ஏற்பட்டதால் அங்கு பணியில் இருந்த 7 தொழிலாளர்கள் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/05/IMG-20200507-WA0116.jpg)
இந்த விபத்தின் காரணமாக அனல்மின் நிலையத்தில் தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், தீயை அணைக்க தீ அணைப்பு வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்தால் நிலையம் முழுவதும் புகைமூட்டத்துடன் சூழப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ரசாயன வாயு ஆலையில் இருந்து வெளியான நச்சு வாயு காரணமாக 10 பேர் உயிரிழந்த சம்பவம் அடங்குவதற்குள் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.