கடலூர் சிப்காட் பகுதியில் பூச்சிக்கொல்லி ரசாயன ஆலை இயங்கி வருகிறது. தனியாருக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில் இன்று பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. காலை பணியில் 100 கு மேற்பட்டவர்கள் வேலை பார்த்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
இதில் 20 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், 10 க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. படுகாயமடைந்தவர்களை தொழிற்சாலைக்கு சொந்தமான மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்றவர்களுக்கு ரசாயன தெளிப்புகள் காரணமாக காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கு நிர்வாகத்தின் அலட்சிய போக்கு தான் காரணம் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.