தமிழகம்

அந்தமானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களுக்கு உதவிய விஜயகாந்த்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அந்தமானில் சிக்கித் தவிக்கும் 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களுக்கு தேமுதிக தலைவர்  விஜயகாந்த் உதவி செய்துள்ளார்.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 8க்கும் அதிகமான மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அந்தமானில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா ஊரடங்கு உத்தரவால் தமிழக மீனவர்கள் ஊர் திரும்ப முடியாமல் அந்தமானில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

தங்குவதற்கு இடவசதி, உண்ண உணவு, குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

ALSO READ  தே.மு.தி.க.வுக்காக 42 தொகுதிகளில் அ.ம.மு.க. வேட்பாளர்கள் வாபஸ்;டி.டி.வி.தினகரன் !

இதுகுறித்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை வாயிலாக செய்தி அறிந்த தேமுதிக தலைவர்  விஜயகாந்த் உடனடியாக அந்தமான் தேமுதிக செயலாளர் உதயசந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீனவர்களின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யுமாறு உதயசந்திரனிடம், பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

பின்னர் அந்தமான் தேமுதிக செயலாளர் தமிழக மீனவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து வருகிறார். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள தமிழக மீனவர்கள், விஜயகாந்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர். தங்களை மீட்டு அழைத்துச் செல்ல மத்திய, மாநில அரசுகளிடம்  விஜயகாந்த் வலியுறுத்த வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

3 பேருடன் திருமணம்…கையில் குழந்தை…யார் தான் அப்பா?

Admin

மத்திய சிறை; கொலை குற்றவாளி தப்பி ஓட்டம் !

News Editor

ஐயோ செம க்யூட்… எமி வித் பேபி..

Admin