கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அண்ணா நகர், தென்கீரனூர், ஜேஜே நகர்,சின்னசேலம், திருக்கோவிலூர், நயினார்பாளையம், தகடி, கூத்தனூர் ஆகிய பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட மரசிற்ப கலைஞர்கள் உள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளாக மரசிற்ப கைவினைத்தொழிலை குல தொழிலாக பாரம்பரியமாக தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். முன்னோர்கள் கிராமம் கிராமமாக சென்று கோயில் தேர் செய்து கொடுத்து வந்தனர்.
தற்போது கோயில் தேர், கோயில் உற்சவ மூர்த்தி, சாமிசிலைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான அலங்கார பொருட்கள் மரசிற்பத்தால் பல வண்ணங்களில் மக்களின் விருப்பத்திற்கேற்ப தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
3 தலைமுறைக்கு முன் உள்ள முன்னோர்கள் கிராமம் கிராமமாக சென்று கோயில்களுக்கு தேர் செய்து கொடுத்து வந்தனர். தற்போது கோயில் தேர், கோயில் உற்சவ மூர்த்தி, சாமிசிலைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான அலங்கார பொருட்கள் மரசிற்பத்தால் பல வண்ணங்களில் மக்களின் விருப்பத்திற்கேற்ப தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்கள் தயாரிக்கும் மரசிற்பங்கள் அண்டை மாநிலங்களான பெங்களூரு, டெல்லி, மும்பை, ஹைதராபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் அனுப்பி வருகின்றனர்.
அமெரிக்கா, லண்டன், ஜெர்மன், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் கள்ளக்குறிச்சி மரசிற்பங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தமிழக அரசு பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்ட பின்பு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் மரசிற்பத்திற்கு புவிசார் குறியீடு வழங்கி உள்ளது.
இதன் மூலம் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் 500 க்கும் மேற்பட்ட மரசிற்ப கைவினை கலைஞர்களின் வாழ்க்கை தரம் உயரும் என மர சிற்ப கைவினைபொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் புவிசார் குறியீடு கிடைத்ததையடுத்து இங்கு உற்பத்தி செய்யப்படும் மரசிற்பங்கள் உலக அளவில் போற்றப்படும் மரசிற்பமாக தரம் உயரும். இதனால் இப்பகுதிகளில் உள்ள மரசிற்ப கலைஞர்கள் புவிசார் குறியீடு கிடைத்ததை பெருமையாக கருதுவதாக மர சிற்ப கைவினைபொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.