அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் , தமிழக அரசின் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும். கண், காது உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறையும் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் இந்த மருத்துவப் பரிசோதனையில், ஒரு ஓட்டுநரின் உடல் நிலை வாகனம் ஓட்டத் தகுதியான நிலையில் இல்லை என்ற மருத்துவர் சான்று அளித்தால், அவர்களுக்கு வேறு பணி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.