சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஞாயற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில் வரும் பிப்.7 ஆம் தேதி சசிகலா தமிழகம் வருவார் என கூறிருந்த நிலையில் அவர் வரும் தேதி மாற்றப்பட்டு பிப். 8 ஆம் தேதி காலை 9 மணிக்கு தமிழகம் வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து சசிகலா வருகையை ஒட்டி, சென்னையில் போரூர் முதல் வரவேற்பு பேரணி நடத்த அமமுக துணை பொதுச்செயலாளர் செந்தமிழன் காவல்துறையில் அனுமதி கேட்டிருந்தார். மனுவில் தெளிவான தகவல் இல்லை என்பதால், காவல்துறை தரப்பில் சசிகலா வரவேற்பு பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மனுவில் தெளிவான தகவல் இல்லை என்பதால் பேரணிக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.