தமிழகம்

தைப்பூசத்திற்கு இனி பொது விடுமுறை : முதல்வர் உத்தரவு  

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனி வரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளைப் பொது விடுமுறை பட்டியலில் சேர்க்க உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து தமிழக முதல்வர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 

பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் சென்றபோது, இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிப்பதுபோன்று தமிழ்நாட்டிலும் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.

ALSO READ  தளபதி 65 படத்தில் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர் !

இக்கோரிக்கையைப் பரிசீலித்து, வரும் ஜனவரி 28-ஆம் நாள் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனி வரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளைப் பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்”. என குறிப்பிட்டுள்ளார்.

#Edapadipalanisamy #tamilnadu #TNgovernment #Tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தனியார் ஆய்வகங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

naveen santhakumar

மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- முதல்வர் அறிவிப்பு..

naveen santhakumar

சட்டமன்ற தேர்தலுக்கு தடை கேட்டு; உயர்நீதிமன்றத்தில் மனு..!

News Editor