நெல்லையில் பள்ளிக்கூடத்தில் கழிவறைச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பொருட்காட்சி திடல் அருகே டவுன் சாப்டர் என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிவறைச்சுவர் இன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில், கழிவறைச்சுவர் அருகே நின்றுகொண்டிருந்த 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து சக மாணவர்கள் பள்ளியில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியும், சாலையில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட மாணவர்களில் இருவர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து பலியான மாணவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.