மதுரை:-
மதுரை மாவட்டம், பாலமேட்டில், ஒன்றாக வளர்ந்த பசுமாடு, பிரிந்து செல்வதை ஏற்க முடியாத காளைமாடு வாகனத்தை மறித்து பாசப் போராட்டம் நடத்தியது.
மதுரை பாலமேடு பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவர் பசு மாடு வளர்த்து வந்துள்ளார். இவரது பசுவுடன் சேர்ந்து அருகில் பாலமேடு மஞ்சமலை கோவில் காளையும் மேய்ச்சலில் ஈடுப்படுவது வழக்கம். ஊரடங்கால் வறுமையில் தவித்த முனியாண்டி இந்த பசுவை விற்க முடிவு செய்துள்ளார்.
இதனால் பசுவை வாகனத்தில் ஏற்றி அனுப்ப முடிவு செய்துள்ளார் பசுமாடு கொண்டு செல்லப்பட்ட வாகனத்தை சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை பின்தொடர்ந்து ஓடியது. இந்த பாச போராட்டம் தந்தி தொலைக்காட்சியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒளிபரப்பானது.
இதன் எதிரொலியாக, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த செலவில் விற்கப்பட்ட பசு மாட்டினை வாங்கி கோவிலுக்கு, தானமாக வழங்கி காளையுடன் சேர்த்து வைத்தார். துணை முதலமைச்சரின் மகன் ஜெயபிரதீப், நேரில் வந்து பாலமேடு கோவிலில் ஒப்படைத்தார்.