மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2000 ரூபாய் நிவாரண நிதி வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
சென்னை மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால், பல வீடுகளில் தண்ணீர் புகுந்து, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை போல மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்து விடுமோ என மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா 2,000 ரூபாய் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
நிவாரணத்தை, ரேஷன் கார்டு அடிப்படையில், மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, 2,000 ரூபாய் ரொக்கமாக வழங்கலாமா அல்லது ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கலாமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.