கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு கடந்த 10ம் தேதி அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று இல்லை.
பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க தமிழக அரசு 1 வாரத்திற்கு முழு ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. அதனையடுத்து இந்த ஊரடங்கு கடந்த திங்கட்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சென்னையில் அதிகரித்த கொரோனா தொற்று தற்போது குறைய தொடங்கியுள்ள நிலையில் கிராமப்புறங்களில் கொரோனா வருகிறது.
இந்நிலையில். முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது தொடங்கி நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில், காவல்துறை ஆணையர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு நீட்டிப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.