அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிலடெல்பியாவில் நடந்த தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மற்றோரு கோரவிபத்து அரங்கேறியுள்ளது மக்களை பெருஞ்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நியூயார் நகரில் பிரான்க்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் 19 மாடிகள் இருந்தன. நேற்று இந்த கட்டடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த 200க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அப்போது கரும்புகை அதிக அளவில் வெளியேறியதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த கடும் போராட்டத்திற்கு இடையே தீயில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 19 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 32 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.