உலகம் மருத்துவம்

கண்களில் நீண்ட நாட்கள் தங்கியிருக்கும் கொரோனா- வைரஸ் அதிர்ச்சி ரிப்போர்ட்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸ் நோயாளியின் மூக்கில் கண்டறியப்பட்ட சில நாட்களுக்கு பிறகு நோயாளியின் கண்களில் இருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான ஆய்வு இத்தாலியின் முதன்முதலில் நோயினால் பாதிக்கப்பட்ட 65 வயதான பெண்மணிகள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்தப் பெண்மணி கொரோனா பிறப்பிடமான சீனாவின் வூஹான் நகரில் இருந்து கடந்த ஜனவரி 23ஆம் தேதி இத்தாலிக்கு வந்துள்ளார்.

இதையடுத்து இந்த பெண்மணிக்கு வறண்ட இருமல், தும்மல், கண்களில் வீக்கம், தொண்டை புண், கண் இமைகளை சுற்றி வீக்கம், மேலும் இரண்டு கண்களும் இளஞ்சிவப்பாக மாறியுள்ளது. இதையடுத்து இத்தாலியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜனவரி 29ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இவரது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த பெண்மணி தனிமைப்படுத்தப்பட்டு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

ALSO READ  இணையத்தில் வைரலாகும் மனித முகத்துடன் பிறந்த பன்றி குட்டி வீடியோ.....

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்றாவது நாளில் அவரது கண்களிலிருந்து Eye Sawbs-களை பரிசோதனை செய்ததில் அதில் வைரஸ் தடயங்களை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

பெண்மணி அனுமதிக்கப்பட்ட இருபதாவது நாளில் அவரது கண்கள் இளம் சிவப்பாக மாறி இருந்தது சரியானது ஆனால் அவரது கண்களில் பிரச்சனைகள் பின் பற்ற வைத்து எடுத்து மறுநாள் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரது கணினியில் வைரஸ் தடைகள் இருந்தன இதையடுத்து இருபத்தி ஏழாவது நாளில் அவரது மூக்கில் வைரஸ் தொற்றுக்கள் கண்டறியப்படாத போதும் அவரது கண்களில் வைரஸ் தொற்றுக்கள் இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  புதிய மின்சார விமானத்தை அறிமுகம் செய்த ரோல்ஸ் ராய்ஸ்

அப்பொழுதுதான் மருத்துவர்கள் அவரது கண்களில் மீண்டும் வைரஸ் தொற்று உருவாவதை கண்டறிந்துள்ளனர். அவரை அவரது கண்களில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலமாக முகத்தில் கண், மூக்கு, வாய் பகுதியில் அடிக்கடி தொடுவதை தவிர்ப்பதும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

எனவே அடிக்கடி கைகளை கண்களில் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும் கண் வழியாக பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் மருத்துவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரே மாதத்தில் 2-வது முறையாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம்!

Shanthi

கடைக்குச் சென்று வீட்டுக்கு திரும்பிய தாயாருக்கு காத்திருந்த அதிர்ச்சி….

naveen santhakumar

X Æ A-12 என்ற பெயரை உச்சரிப்பது எப்படி என்பதை விளக்கியுள்ளார் எலன் மஸ்க்…

naveen santhakumar