அண்டார்டிக்காவில் உக்ரைன் நாட்டை சேர்ந்த Vernadsky Research Base என்ற ஆய்வு மையம் உள்ளது. இம்மையம் அண்டார்டிக்காவில் வட பகுதியில் Galindez எனும் தீவில் அமைந்துள்ளது.
இந்த ஆய்வு மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அந்த ஆய்வு மையத்தை சுற்றி எங்கு ரத்த நிறத்தில் எங்கும் பனி காணப்படுகிறது.
இது குறித்த புகைப்படங்களை உக்ரைன் நாட்டின் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகம் (Ministry of Education and Science) தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில்:-
இந்த ரத்த பனி படர்வுக்கு காரணம் கிளாமிடோமோனாஸ் நிவாலிஸ் (Chlamydomonas nivalis) என்னும் ஆல்கா (பாசி).
இந்தவகை ஆல்காக்கள் கடும் குளிரான துருவப் பகுதிகள் மற்றும் மலை பகுதிகளில் காணப்படும். இவை கடும் குளிரையும் தாங்கி வாழும் தன்மை கொண்டவை.
இவற்றின் குளோரோபிளாஸ்ட்களில் கரோட்டினாய்டு என்னும் நிறமி உள்ளது. இந்த கரோட்டினாய்டுகள் தான் கேரட் மற்றும் ஆரஞ்சு பழங்களில் நிறத்திற்கு காரணமான நிறமி ஆகும்.
இந்த அல்காக்கள் அதிக சூரிய ஒளி பெறும் பட்சத்தில் அதிகமான கரோட்டினாய்டுகளை உற்பத்தி செய்யும்.
தற்பொழுது தென் அரைக்கோளத்தில் கோடை காலம் ஆகும். எனவே தான் இந்த விசித்திர நிகழ்வு நிகழ்ந்துள்ளது என்று கூறினார்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அரிஸ்டாட்டில் இதுபோன்ற நிகழ்வு குறித்து கூறியுள்ளார். அவர் இதை ‘தர்பூசணி பனி’ என்று குறிப்பிட்டுள்ளார்.