தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்ட ஓட்டு எண்ணிக்கையில், முடிவுகள் வெளியிடப்பட்டது. திருப்பூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், 82 வயது விசாலாட்சி என்னும் மூதாட்டி ஊராட்சி தலைவராக வெற்றிப்பெற்றார். அதேபோல், மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்தில் அரிட்டாப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தலில் 79 வயதான வீரம்மாள் என்ற மூதாட்டி, வெற்றி பெற்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூலகிரியில், காட்டிநாயக்கன்தொட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 21 வயதான கல்லூரி மாணவி ஸ்ரீசந்தியா ராணி வெற்றி பெற்றார். இவர், பி.பி.ஏ., 2ம் ஆண்டு படித்து வருகிறார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச வயதாக 21 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே வயதில் பஞ்சாயத்து தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீசந்தியா, இளம் வயது பஞ்சாயத்து தலைவி என்னும் பெருமையை பெற்றார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.