கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு கடந்த 10 ஆம் தேதி அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று இல்லை.
அதனையடுத்து தமிழக அரசு 1 வாரத்திற்கு முழு ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதில், தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.
இதனையடுத்து இன்று காலை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பால் விநியோகம், மருந்து கடைகள், பெட்ரோல் நிலையங்கள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஓட்டல்களில் குறிப்பிட்ட நேரம் வரை பார்சல் மட்டுமே வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரேஷன் கடைகள் பற்றி எந்த அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது. இதனையடுத்து தளர்வுகளற்ற உரடங்கில் ரேஷன் கடைகள் செயல்படுமா என கெவ்லவீ எழுப்பிவந்த நிலையில் அரசு ரேஷன் கடைகள் செயல்படும் என அறிவித்துள்ளது. அதன்படி காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை ரேஷன் கடை இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.