தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகளவில் பரவி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,08,921 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கு, 4,157 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2.71 கோடியை கடந்துள்ளது.
இந்தியாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று 2 லட்சத்துக்கும் குறைவாக கொரோனா தொற்று பதிவாகிய நிலையில் இன்று மீண்டும் 2 லட்சத்தை கடந்துள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.