தமிழகம்

உலக பட்டினி தினம்; ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிய காங்கிரஸ் கட்சியினர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு கொரனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்து வரும் ஏழைகளுக்கு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

மே 28ஆம் தேதி உலக பட்டினி தினம் ஐநா பெருமன்றம் மற்றும் உலக நாடுகளால் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் உணவுக்கு வழியின்றி கஷ்டப்பட்டு வரும் ஏழைகளுக்கு உதவும் பொருட்டு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ALSO READ  நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று:

அதன்படி கொரோனா ஊரடங்கின் காரணமாக வேலை இழந்து தவித்து வரும் ஏழைகளுக்கும் தாமிரபரணி நதிக் கரையோரம் கூடாரம் அமைத்து வசித்து வரும் கூலித் தொழிலாளர்களுக்கும் உணவு வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு மளிகை பொருட்கள் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை தயார் செய்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நேரடியாக அவர்கள் இருக்கும் பகுதிக்குச் சென்று உணவுப் பொருட்களை வழங்கினர்.

ALSO READ  பெண்களே உங்களிடம் காவலன் செயலி இருக்கா…. அப்ப 10% தள்ளுபடி

மேலும் அவர்களுக்கு தேவையான மருந்து உள்ளிட்ட பொருட்களும் அவர்களுடைய குழந்தைகளுக்கு தேவையான உடை உள்ளிட்டவைகளும் வழங்குவதற்கான ஏற்பாடு செய்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோயில் நிலத்தை அபகரித்தால் குண்டர் சட்டம் -உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Admin

பயணிகள் கவனத்திற்கு… இனி ரயிலில் பயணம் செய்ய இது கட்டாயம்!

naveen santhakumar

கிருஷ்ணகிரியில் மாம்பழகூழ் உற்பத்தி தொடக்கம்…

naveen santhakumar