தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் நாடோடிகள். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாந்தினி தற்போது முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது தொடர்பாக நேற்று
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை சாந்தினி, அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 வருடம் குடும்பம் நடத்தியுள்ளார்.பின்னர் கருவுற்ற என்னை கருக்கலைப்பும் செய்ய வைத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தன்னை திருமணம் செய்ய மறுப்பதோடு, கூலிப்படையை வைத்து தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.என்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவர் மீது நாடவாடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.