தமிழகம்

38 சதவீதம் பேர் மட்டுமே சரியாக மாஸ்க் அணிகிறார்கள் – சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழ்நாடு அரசின் சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம் என்றும் தடுப்பூசி போடாமல், கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்தார்..தமிழகத்தில் இரண்டாவது அலை குறைந்தாலும் சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் கொரானா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால், தினசரி கொரானா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக இரண்டு ஆயிரத்தை நெருங்குகிறது. இந்த செய்தி கவலை அளிக்கிறது. தற்போது தமிழகத்தில் 38 சதவீதம் பேர் மட்டுமே சரியாக மாஸ்க் அணிகிறார்கள். மாஸ்க் அணியவேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அதுபோன்று கூட்டம் அதிகம் உள்ள இடத்திற்கு செல்பவர்கள் பலர் தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை என்றும் தடுப்பூசி போடாமல், அதிகம் கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி கூறினார்..

ALSO READ  தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Coronavirus: Tamil Nadu transfers Health Secretary Beela Rajesh after death  toll controversy

அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப் படுவதில்லை. கொரானா தொற்று குறித்த விழிப்புணர்வுவும், மனமாற்றமும் மக்களுக்கு தேவை. பொது மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரானா தொற்று இல்லை என்ற இலக்கை எட்ட முடியும். கொரானா தொற்று தடுப்பூசி போடுங்கள் என்று வீதி வீதியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சிலர் தடுப்பூசி போடுவதில்லை.

ALSO READ  டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணைய குழு கூட்டம்: அரசு தேர்வுகளுக்கான தேதி வெளியாக வாய்ப்பு
Vaccination with corona is challenging; Do not fail; Health Secretary  Radhakrishnan || கொரோனா தடுப்பூசி போடுவது ஒரு சவால் தான்; தோல்வி இல்லை -  சுகாதாரத்துறை செயலாளர் ...

எனவே கொரானா தொற்று குறித்து பொது மக்கள் அலட்சியமாக நினைக்க வேண்டாம் என சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் பதித்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நில அளவீட்டு கட்டணத்தை 40 மடங்கு உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு!… 

naveen santhakumar

சி.ஏ.ஏ போராட்டத்தில் இந்து பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய இஸ்லாமியர்கள்…

Admin

தமிழக பள்ளி கல்லூரிகள் 11 மாதங்களுக்கு பிறகு திறப்பு!

News Editor