கடந்த 5 – ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது . இதைத் தொடர்ந்து ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் ஆசிரியர் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் . இந்த திருவிழா வரும் 17 – ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது .
இந்திய மொழி அகராதி , பேசும் புத்தகங்கள் , சிபிஎஸ்இ – யின் பள்ளி தர உறுதி சைகை மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்பு , ஆசிரியர்களுக்கான நிபுன் பாரத் பயிற்சி திட்டம் , வித்யாஞ்சலி இணையதளம் ஆகியவற்றையும் பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார் .
வித்யாஞ்சலி இணையதளம் மூலம் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த தன்னார்வலர்கள் , தனியார் நிறு வனங்கள் தங்களது பங்களிப்பை வழங்க முடியும் .
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது : கொரோனாவால் எழுந்துள்ள நெருக்கடியான சூழ்நிலையிலும் மாணவர்களின் எதிர் காலத்திற்காக ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் .
உலகம் அதிவேகமாக மாறி வருகிறது . இதை கருத்தில்
கொண்டு , எதிர் காலத்துக்கு ஏற்ற தேசிய கல்விக் கொள்கை இந்தியாவில் அமல் செய்யப்பட்டிருக்கிறது.
அரசுப்பள்ளிகளில்கல்வியின் தரத்தை உயர்த்த அனைத்து தரப்பினரும் தங்களது பங் களிப்பை வழங்க வேண்டும் .
குறிப்பாக தனியார் துறையினர் அதிக பங்களிப்பை பங்களிப்பை வழங்க வேண்டுகிறேன் . இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் அனைவருக்கும் பங்கு இருக்கிறது என்று கூறினார்.