புதுடில்லி:
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்குகின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் எனும் பெயரின் இந்தியாவில் தொடங்கி உள்ளது.
ஸ்டார்லிங்க் சாட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் இந்திய பிரிவின் இயக்குனர் சஞ்சய் பர்கவா கூறியதாவது: சாட்டிலைட் பிராட்பேண்டு சேவைகளை வழங்கி வரும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘ஸ்டார்லிங்க்’ இந்தியாவில் அடுத்த ஆண்டு (2022) டிசம்பரில் இருந்து பிராட்பேண்டு சேவைகளை வழங்க உள்ளது.
இந்திய அரசின் அனுமதி பெற்று விரைவில் 10 நாடாளுமன்ற தொகுதிகளில் முதலில் துவங்கிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, சாட்டிலைட் பிராட்பேண்டு இணைப்புக்காக 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக, ஸ்டார்லிங்க் நிறுவனம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
2022 ஆண்டு டிசம்பருக்குள் இரண்டு லட்சம் இணைப்புகள் தொடங்க உள்ளதாகவும் இதன் மூலம் அதிவேக இணையச் சேவையை இந்திய வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று சஞ்சய் பர்கவா தெரிவித்துள்ளார்.
செயற்கைக்கோள் மூலம் உலகளாவிய மொபைல் தனிப்பட்ட தொடர்பு மற்றும் இந்திய அளவில் தொடர்பு கொள்வதற்குரிய உரிமம் கேட்டு இந்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் இந்திய பிரிவின் இயக்குனர் சஞ்சய் பர்கவா தெரிவித்தார்.