இந்தியா

மன அழுத்தம் காரணமாக குழந்தைகளை கொன்ற தொழிலதிபர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லியில் மன அழுத்தம் காரணமாக தொழிலதிபர் தனது குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியின் ஷாலிமார் பகுதியை சேர்ந்த மதூர் மலானி என்ற தொழிலதிபர் நடத்தி வந்த காகித தொழிற்சாலை 6 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.

மீண்டும் ஆலையை திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த மதுர் மலானி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும், குடும்பத்தினருக்கு மதுர் மலானியின் பெற்றோர்கள் ஆதரவாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ALSO READ  பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் வீட்டில் குழந்தைகள் இருவரும் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மதுர் மலானியை காணததால் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அருகிலுள்ள மெட்ரோவில் ரயில் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.

தொழிலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் மதுர் மலானி மனைவி அருகில் உள்ள மார்க்கெட்டிற்கு சென்றதால் அவர் தப்பித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் கட்சியிலிருந்து விலகல்

News Editor

தினமும் 3 மணி நேரம் கரண்ட் கட்.. அரசு அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி!

naveen santhakumar

அம்பானி வீட்டு கார் டிரைவர் ஆக ஆசையா ?, அப்ப இதை தெரிஞ்சிக்கங்க

Admin