சென்னை:-
கடந்த பிப்ரவரி மாதம் ரொமான்டிக் ப்ளஸ் காமெடி ஜானரில் (Romedy) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘ஓ மை கடவுளே’. இப்படத்தினை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு பாராட்டியுள்ளார்.
இப்படத்தை அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். இப்படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் மற்றும் பலர் நடித்து இருந்தனர். நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆண், பெண், நட்பு, காதல் என பல விஷயங்களை நகைச்சுவையாகவும் வித்தியாசமாகவும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த இப்படம்.
இந்நிலையில் இப்படம் கோலிவுட்டை தாண்டி டோலிவுட்டிலும் பாராட்டை பெற்றுள்ளது. ஆம், இந்த படத்தை பார்த்த தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘ஓ மை கடவுளே’ படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும்படி இருந்தது. சிறந்த கதை, நல்ல இயக்கம் என்று இயக்குநரை பாராட்டியுள்ளார். மேலும் அசோக் செல்வனின் நடிப்பு நேச்சுரலாக இருந்ததாகவும் மகேஷ்பாபு குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த அசோக் செல்வன்:-
இது உண்மையாகவே ஓ மை கடவுளே மொமண்ட் தான். நன்றி சார். நான் உங்களின் பெரிய ரசிகன். தற்போது உற்சாகத்தில் ஆடிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் மகேஷ் பாபுவின் பாராட்டுக்கு இயக்குநர் உட்பட மற்ற படக்குழுவினரும் தங்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.