சினிமா தமிழகம்

நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயை விசாரணைக்கு அழைத்துச் சென்றது வருமான வரித்துறை.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து வருகிறது.

லோகேஷ் கனகராஜ்.

நெய்வேலி என்எல்சி-ன் ( NLC) 2வது சுரங்கப் பகுதியில் இதன் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அங்கு வந்த வருமான வரித்துறை அதிகரிகள் விசாரணைக்காக விஜயை அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ  இணையத்தில் லீக்கான 'மாஸ்டர்' திரைப்படம் அதிர்ச்சியில் படக்குழு !

நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கேரவனிலேயே விசாரணை மேற்கொண்டனர்.

திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஆன்ட்ரியா, அர்ஜூன் தாஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இதே போல் ‘பிகில்’ படத்தை தயாரித்த AGS சினிமாஸ் நிறுவனத்தின் அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. பிகில் திரைப்படத்தில் விஜய் பெற்ற சம்பள விவரங்கள் குறித்த ஆவணங்களை அதிகாரிகள் கேட்தாக கூறப்படுகிறது.

ALSO READ  உலகநாயகன் நடிக்கும் வித்தியாசமான பெயர் கொண்ட படம்…..பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர் வெளியீடு…..

சென்னையில் சினிமா தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தினர். இவர் தான் பிகில் திரைபடத்திற்கு பைனான்ஸ் செய்ததாக கூறப்படுகிறது.

அன்புச்செழியன்.

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நம்மை காக்க அரும்பாடு படும் ராணுவ வீரர்களுக்கு நாம் தாராளமாக நிதியளிக்கலாம்-முதல்வர்:

naveen santhakumar

நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கை தருகிறது; நடிகர் சூர்யா !

News Editor

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது; கமல் உடல்நிலை குறித்து அறிக்கை வெளிட்ட சுருதிஹாசன், அக்ஷராஹாசன்!

News Editor