கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு கடந்த 10 ஆம் தேதி அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று இல்லை.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் எப்படி மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என பலரும் கேள்வி வருகின்றனர்.
மேலும், ஊரடங்கு காலத்தில் மக்கள் வெளியில் வராமல் இருப்பதற்கும், முகக்கவசம், தடுப்பூசி போன்றவைகளுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வரை பொதுமக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், நடிகர் முகேன் ராவ் கொரோனா காலம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் “மக்கள் இறக்கும் செய்தியைக் காண்பதும், கேட்பதும் வேதனையாக இருக்கிறது. இந்த தொற்று இன்னும் முடிவடையவில்லை. இதன் வளைவைத் தட்டையானதாக மாற்றும்வரை நாம் பாடுபட வேண்டும். கவனமாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், மிக முக்கியமாக, வீட்டிலேயே இருங்கள். நாங்கள் உங்களுக்காகத்தான் அக்கறைகொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.