சினிமா

‘உங்களை நடிகர் என நினைத்தேன்’ தனுஷ் குறித்து பிரபல பாலிவுட் இயக்குநர் கருத்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் லால், யோகி பாபு, கௌரி கிஷன், லட்சுமி பிரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கர்ணன் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை  பெற்றது. மேலும்  ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை படம் பார்த்த அனைவரும் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.  
அந்த வகையில் கர்ணன் படத்தை பார்த்த பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “‘கர்ணன்’ திரைப்படம் பார்த்த அனுபவத்தை கூற வேண்டுமென்றால் அற்புதமாகவும் சிறப்பாகவும் இருந்தது எனலாம். மாரி செல்வராஜ் சிறந்த கதை சொல்லி. அவருடைய சிந்தனையை திரையில் கொண்டு வந்த விதம் அற்புதமாக இருந்தது. தனுஷ், நீங்கள் நடிகர் என நினைத்திருந்தேன். தான் ஒரு மேஜிக் கலைஞன் என்பதை என்னிடம் நீங்கள் சொல்லியிருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 


Share
ALSO READ  "ஓ மை கடவுளே" படத்தின் இயக்குநர் கொடுத்த அப்டேட்...!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘புதிய மாற்றங்கள் வரட்டும்’ பினராயிக்கு மோகன் லால் வாழ்த்து !

News Editor

அண்ணாச்சியை சந்தித்த ரஜினி; இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

News Editor

விக்ரம் படத்திலிருந்து விலக்கியதற்கான காரணத்தை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்!

News Editor