வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள் என இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் ‘சாணிக் காயிதம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் இணைத்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் செல்வராகவன்.
![Saani Kaayidham First Look Poster | Selvaraghavan | Keerthy Suresh, Arun Matheswaran - YouTube](https://i.ytimg.com/vi/7tTMCaIFEqY/maxresdefault.jpg)
மேலும், செல்வராகவன் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில்நடித்து வருகிறார். இந்த படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
![Director Selvaraghavan joins the cast of Thalapathy Vijay's 'Beast' - Full Details - Tamil News - KARKEY](https://1847884116.rsc.cdn77.org/tamil/news/social/vijay_selvaraghavan_aug07-b75.jpg)
அதோடு தனுஷ் நடிப்பில் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட படங்களையும் இயக்க உள்ளார் செல்வராகவன்.
இந்நிலையில் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவரது ட்விட்டர் பதிவில்,
தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள் என பதிவிட்டுள்ளார்.