நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்து சென்னை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/03/IMG-20200328-WA0021.jpg)
எனினும், இந்த தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சை எழுந்துள்ளதை தொடர்ந்து ஒட்டியிருந்த கொரோனா நோட்டீஸை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்த தகவலின் படி:-
அவர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாக வந்த பாஸ்போர்ட் தகவல் அடிப்படையில் கமலஹாசனின் கட்சி அலுவலகம் தனிமைப்படுத்தப்பட்டதாக நோட்டீஸ் ஓடியதாகவும், இந்த அலுவலகத்தில் யாரும் இல்லை என தகவல் வந்ததையடுத்து நோட்டீசை அப்புறம் படுத்தியதாகவும் விளக்கம் அளித்தனர்.
சமீபத்தில் ஸ்ருதிஹாசன், தங்கள் குடும்பத்தில் எல்லோரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டோம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/03/IMG-20200328-WA0023.jpg)