இயக்குநர் ஏ.எல்.விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகிறார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இவர்களுடன் சமுத்திரகனி, பாக்யஸ்ரீ, மதுபாலா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தமிழ்,தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியவுள்ளது. தலைவி படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணியில் தீவிரமாக இயங்கி வருகிறது. படக்குழு தலைவி’ திரைப்படம் ஏப்ரல் 23-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டைதேதியை தள்ளி வைத்துள்ளது.
இது தொடர்பாக படக்குழு வெளியிட்ட அறிவிப்பில், உங்களின் அனைவரின் ஆதரவிற்கும் நன்றி தலைவி திரைப்படம் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியக என அறிவித்திருந்தோம் ஆனால் இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பல மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டும் மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது. மேலும் மக்களின் நலன் கருதி ஏப்ரல் 23 ஆம் தேதி தலைவி படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் பட ரீலீஸின் புதிய தேதியை அறிவிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
#thalaivi #TamilThisai #kanganaranaut #ALvijay #Jeyalalitha #Aravindhsamy #cinema #cinemanews #cineupdate #kollywood #MGR #tamilnadu #admk #JeyalalithaBioPic #ThalaiviTrailer