தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
புதுச்சேரியில் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 20-ஐ தாண்டி வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 922 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 1,915 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 96,982ஆகவும், உயிரிழப்பு 1,382 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை 79,765 பேர் குணமடைந்துள்ளனர்.புதுச்சேரியில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு கீழ் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.