புவனேஸ்வர்:-
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் வேளையில் நேற்று வங்கக்கடலில் உருவான அம்பன் புயல் மேற்கு வங்கம் ஒடிசா ஆகிய மாநிலங்களில் பெரும் சேதத்தை விளைவித்தது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/05/IMG-20200521-WA0111.jpg)
1999 ஆம் ஆண்டிற்குப் பிறகு வங்கக்கடலில் உருவான சூப்பர் புயலான அம்மன் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலைகீழாக புரட்டிப் போட்டது மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனங்கள் நேற்று அடித்த சூறாவளி காற்றில் தலைகீழாக கவிழ்ந்து கிடக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 6 மணி நேரத்திற்கு 86 கிலோ மீட்டர் முதல் 120 கிலோமீட்டர் வரை வேகத்தில் இந்தப் புயல் தாக்கியது இதனால் பெருமளவில் மரங்கள் வேரோடு சாய்ந்தன ஏராளமான மின்கம்பங்கள் பிடிங்கி வீசப்பட்டது உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலமாக கருதப்படும் சுந்தரவன பகுதியில் இப்புயலால் பெருமளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மிகச்சரியாக முன்கணிப்பு செய்ததால் மிகப்பெரிய உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.