இந்தியா

அமிர்தசரஸ் பொற்கோவிலில் ஹோலி கொண்டாட்டம் விமர்சையாக நடைபெற்றது…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமிர்தசரஸ்:-

‘ஹோலா மொஹல்லா’ திருவிழாவையொட்டி, அமிர்தசரஸ் பொற்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்.

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஒரு சில பகுதிகளில் கொண்டாட்டம் தடைபட்டுள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பிரபலமான அமிர்தசரஸ் பொற்கோவிலில் ‘ஹோலா மொஹல்லா’ திருவிழா நடைபெற்று வருகிறது. அனந்தபூர் சாஹிப்பில் மூன்று நாட்கள் கொண்டாடப்படும் ஒரு விழா ஹோலா மொஹல்லா.

இந்த ஹோலா மொஹல்லா சீக்கிய மதகுரு கோபிந்த் சிங்- ஆல் தொடங்கப்பட்டது.

ALSO READ  இந்திய வான்வெளியில் பறப்பதை தவிர்த்து மலேஷியா சென்ற இம்ரான் கான்

இந்த நாளில் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்பில் உள்ள பக்தர்கள், தங்கள் குடும்பத்தினருடன்வழிபாடு செய்வார்கள்.புனித நீரில் நீராடி, குரு ஷாஹிப்பின் ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்.

தொடர்ந்து, தற்காப்பு கலை தொடர்பான நிகழ்ச்சிகள் அரங்கேறும். இன்றுஇந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ALSO READ  பத்மஸ்ரீ விருது பெற்ற பொற்கோயிலின் முன்னாள் ‘ஹசூரி ராகி’ கொரோனா வைரஸால் மரணம்.....

முன்னதாக, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஹோலி விடுமுறை என்பதாலும் அமிர்தசரஸ் பொற்கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பி.எம்.கேர்ஸ் நிதி மூலம் ஆக்சிஜன் ஆலை நிறுவப்படும் ; பிரதமர் மோடி பேச்சு !

News Editor

முதலில் பிரதமர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்; திமுக எம்.பி தயாநிதி மாறன் !

News Editor

பூமிதான இயக்கத்தின் தந்தை

Admin