அமிர்தசரஸ்:-
‘ஹோலா மொஹல்லா’ திருவிழாவையொட்டி, அமிர்தசரஸ் பொற்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/03/IMG-20200310-WA0097.jpg)
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஒரு சில பகுதிகளில் கொண்டாட்டம் தடைபட்டுள்ளது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/03/IMG-20200310-WA0090.jpg)
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பிரபலமான அமிர்தசரஸ் பொற்கோவிலில் ‘ஹோலா மொஹல்லா’ திருவிழா நடைபெற்று வருகிறது. அனந்தபூர் சாஹிப்பில் மூன்று நாட்கள் கொண்டாடப்படும் ஒரு விழா ஹோலா மொஹல்லா.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/03/IMG-20200310-WA0094.jpg)
இந்த ஹோலா மொஹல்லா சீக்கிய மதகுரு கோபிந்த் சிங்- ஆல் தொடங்கப்பட்டது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/03/IMG-20200310-WA0095-1.jpg)
இந்த நாளில் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்பில் உள்ள பக்தர்கள், தங்கள் குடும்பத்தினருடன்வழிபாடு செய்வார்கள்.புனித நீரில் நீராடி, குரு ஷாஹிப்பின் ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/03/IMG-20200310-WA0099.jpg)
தொடர்ந்து, தற்காப்பு கலை தொடர்பான நிகழ்ச்சிகள் அரங்கேறும். இன்றுஇந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/03/IMG-20200310-WA0100.jpg)
முன்னதாக, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/03/IMG-20200310-WA0096-936x1024.jpg)
ஹோலி விடுமுறை என்பதாலும் அமிர்தசரஸ் பொற்கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.