இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் பதிவாகி வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநிலங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
டெல்லி, மகாராஷ்டிரா குஜராத் மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் தற்போது பஞ்சாபிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இரவு 9 மணிமுதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும் இந்த ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீடிக்கவுள்ளது. மேலும் பொதுக்கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள், போன்றவற்றிற்கு தடை விதித்து,திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதி என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
#corona #Coronapositive #Covid!9 #NewCoronaVirus #TamilThisai #Covaccine #Centralgovt #coronadeath #CoronaFightIndia #HealthMinistery #CoronaUpdate #COVID19PostiveCases #CoronaPatients #Punjab #PunjabLockdown