ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று வருகின்றனர்.கேரள மாநிலம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் சபரிமலைக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவதால் அங்கு செல்லும் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2019/12/2.jpg)
இனி எளிதாக சபரிமலைக்கு செல்லும் விதமாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புல்லட் மோட்டார் சைக்கிள்களை சபரிமலை பக்தர்களுக்கு வழங்கும் திட்டத்தை தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் பிரிவு அலுவலகம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. .கொச்சியில் மோட்டார் சைக்கிளை வாடகைக்கு விடும் Caferides, என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2019/12/caferides.png)
தற்போத செங்கனூர் ரயில் நிலையத்திலிருந்து புல்லட் மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சபரிமலைக்கு செல்லலாம். மேலும் திருவனந்தபுரம் எர்ணாகுளம் கோட்டயம் ஆலப்புழா திருச்சூர் ரயில் நிலையங்களிலும் புல்லட் மோட்டார் சைக்கிள் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2019/12/5.jpg)
இந்த மோட்டார் சைக்கிள்கள் நாளொன்றுக்கு 1200 ருபாய் என்கின்ற விதத்தில் வாடகைக்கு விடப்படுகின்றன அல்லது 2 கிலோமீட்டர் தொலைவு வரை நாள் ஒன்றுக்கு ஓட்டலாம். குறிப்பிட்ட நேரத்தை தாண்டும் பட்சத்தில் ஒரு மணி நேரத்திற்கு கூடுதலாக 100 ரூபாய் வசூலிக்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் புல்லட் மோட்டார் சைக்கிள்களை போல இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் விரும்பும் ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிள்களும் விரைவில் வாடகைக்கு விடப்படும் என்று தெரிகிறது.